14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான, மீளப்பெறமுடியாத அதிகார பகிர்வான சமஷ்டியை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக திங்கட்கிழமை (31) காலை கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.

இதேவேளை கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது

கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றுள்ளது இதில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத அதிகாரப்பகிர்வை உறுதி செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டத்தின் ஓராண்டை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (31) வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டன




வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு