14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

திருகோணமலையில் நோயாளி பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

மஹதிவுல்வெவ தெவனிபியவர பகுதியில் நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைப்பெடுத்து முறைப்பாடு செய்துள்ளனர்.


இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது:


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் உட்பட குறித்த பெண்ணின் கணவர் மற்றும் அயல் வீட்டுக்காரர் கூட்டாக இணைந்து குறித்த பெண்ணின் வீட்டில் மது அருந்திவிட்டு, மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக்கச்சேரி நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, கைதான குறித்த சந்தேக நபர் தாம் மது அருந்திய வீட்டுக்கு வந்து, நோயுற்ற நிலையில் இருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், தனது விருப்பத்துக்கு இணங்காத பட்சத்தில் பெண்ணை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.



இந்நிலையில், பாதிக்கப்பட்ட குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





திருகோணமலையில் நோயாளி பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு