14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட - மேகசுந்தரம் வினோரஜ்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 4 மணித்தியாலங்கள் புதன்கிழமை (21) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோரஜ் தெரிவித்தார்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க புதன்கிழமை நான் அங்கு சென்றிருந்தேன். இதன்போது நான் அங்கிருந்த அதிகாரிகளால் 4 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.



இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்)  அவர்கள் என்னைப்பற்றி பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களைப்  பற்றி நான் முகப்புத்தகத்தில் (பேஸ்புக் பக்கத்தில்)  பத்திவேற்றிய விடையங்கள் தொடர்பிலேயே நான் விசாசிக்கப்பட்டேன். என மேகசுந்தரம் வினோரஜ் தெரிவித்தார்.

 





கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட - மேகசுந்தரம் வினோரஜ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு