வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க கோரி இதற்கு முன்னர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட போதிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இன்று(01) முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு அகில இலங்கை தாதியர் சங்கம் ஆதரவளிக்காது என சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவஆரச்சி தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..