கடந்த 13ஆம் திகதி கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிபத்கொடை, பேலியகொட, கடவத்தை, கிருலப்பனை, பொரலஸ்கமுவ மற்றும் வத்தளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்த மேற்கொண்ட கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 37 வயதுடைய சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் படி, பெண் ஒருவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (15) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..