இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 தமிழ்நாட்டு மீனவர்களையும் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தியாவின் தமிழ் நாடு, இராமநாதபுரம் மற்றும் காயல்பட்டினம் பிரதேசங்களில் வசிக்கும் எட்டு மீனவர்களான அருள்தாஸ், கர்ணன், ராஜூ, ஜான், மரியசாது, மரிரோஸ்டன் மற்றும் சூசை ஆகிய எட்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு கோடியக்கரை பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டு முல்லைத்தீவு மாவட்டம் சாலை கடற்பகுதியில் நேற்று அதிகாலை அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும்போது இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கடல் வள மற்றும் நீரியல் திணைக்கள அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் திருகோணமலை பதில் நீதிவான் அன்பரின் வாசல்வதளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையிலே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..