இருவேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (15) மாலை பறயனாலங்குளம் பெரியகட்டு பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற 26 வயதுடைய இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடமயிலபிட்டிய தலாத்துஓயாவில் வசிக்கும் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 35 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார். மேல் லுணுகம, மண்டாவளையில் வசிக்கும் கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
0 Comments
No Comments Here ..