10,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

IMFயின் மூன்றாம் தவணையும் கிடைக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மார்ச் 7 ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை தொடர்பான இரண்டாவது மீளாய்வை ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது IMF பிரதிநிதிகள் சுமார் இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை நடத்துவார்கள் என்று நம்பப்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். அத்துடன் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை நிறைவு செய்வது தொடர்பிலான மீளாய்வும் செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் பணியாளர் சபையின் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை பெற்றுக்கொள்ளப்படும் இராஜாங்க நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.




IMFயின் மூன்றாம் தவணையும் கிடைக்கும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு