12,May 2024 (Sun)
  
CH
SRILANKANEWS

மேல் மாகாண தரம் 10,11 மாணவர்களுக்கான அறிவிப்பு!

மேல் மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் இறுதி தவணைப் பரீட்சைகள் நாளை (06) மீண்டும் நடைபெறவுள்ளன.தவணைப் பரீட்சையில் இதுவரை நடாத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறும் என மேல் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு முன்னதாக விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வகுப்புக்களுக்கான பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் நடைபெறும் என மேல்மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.




மேல் மாகாண தரம் 10,11 மாணவர்களுக்கான அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு