12,May 2024 (Sun)
  
CH
SRILANKANEWS

மிகவும் குறைந்த நாட்கள் வேலை செய்யும் இலங்கையர்கள்!

உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.அத்துடன் கடந்த வாரம் பத்திரிக்கையில் ஒரு பச்சை மிளகாய் 15 ரூபாய் என்று பார்த்தபோது மிகவும் வெட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், நாம் உழைக்க வேண்டும். நம் நாட்டில் இப்படித்தான் நடக்கிறதா என்று நெஞ்சில் கை வைத்து கேட்க வேண்டும்.


உலக மக்கள் தொகை விகிதத்தின்படி சராசரியாக 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் அரசப் பணியில் இருக்க வேண்டும். எனினும் இலங்கையில் 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளார். இவ்வளவு பெரிய பொது சேவை உலகில் எங்கும் இல்லை. இவர்களை பணி நீக்கம் செய்ய நான் கூறவில்லை. அப்படியானால், நமக்கு திறமையான பொது சேவை இருக்க வேண்டும். இன்று கடிதம் கொடுத்தால் நாளை பதில் சொல்ல முடியும். மேலும் இந்த சிறிய நாட்டில் நமது இராணுவம் எவ்வளவு பெரியது. இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்தை விட நமது நாட்டில் பெரிய இராணுவம் உள்ளது. மேலும் உலகில் மிகக் குறைந்த வேலை செய்யும் நாடு இலங்கை.


வருடத்திற்கு 170 அல்லது 179 நாட்கள் இலங்கையில் வேலை செய்வதைப் பார்த்தேன். இப்படி ஒரு நாடு முன்னேற முடியுமா? இதில் கவனம் செலுத்துங்கள். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் உழைக்க வேண்டும். நம் கடமையை நிறைவேற்ற வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும். நான் இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன். நானும் பாடசாலை மாணவனாக தேசியக் கொடியுடன் சுதந்திர விழாவில் பங்கேற்றேன்.


நமது நாடு அப்போது மிகவும் பணக்கார நாடாக, பலமான நாடாக, பொருளாதார ரீதியாக மிகவும் வலிமையான நாடாக இருந்தது. வெளிநாடுகளுக்கு கடன் கொடுத்தோம். எழுபதுகளுக்குப் பிறகு இன்றைய நிலை என்ன? இலங்கையர்களாகிய நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. கடந்த வாரம் பத்திரிக்கையில் ஒரு காய் பச்சை மிளகாய் 15 ரூபாய் என்று பார்த்தபோது மிகவும் வெட்கப்பட்டேன். இந்த நிலத்தில் எதையும் பயிரிடலாம்.


இதற்கு முக்கிய காரணம் சுரண்டல். 200 முதல் 300 ரூபா வரையிலான ஒரு கிலோகிராம் கரட் கொழும்புக்கு வரும் போது 2,000 ரூபாவாகும். விவசாயிக்கு ஒரு சதம் அதிகமாகக் கிடைக்காது. நெல் விவசாயிகளுக்கும் இதே நிலைதான். நியாயமற்ற சுரண்டல் உள்ளது. இவை நிறுத்தப்பட வேண்டும். விவசாயி மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம். எனவே இலங்கையர்களாகிய நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.




மிகவும் குறைந்த நாட்கள் வேலை செய்யும் இலங்கையர்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு