10,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு!!

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை இன்று (14) கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

டிப்பரின் சக்கரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை தடுத்து நிறுத்தியதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த டிப்பர் வாகனம் பொலிஸாரை விபத்திற்கு ஆளாக்க முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு