24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ். சிறையில் இருந்து 17 பேர் விடுதலை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் 679 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 8 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதில் ஒரு பெண் உட்பட 16 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

விடுதலை செய்யப்பட்டவர்களில் 4 பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 17 பேர் இன்றைய தினம் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப் பணம் செலுத்த முடியாது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




யாழ். சிறையில் இருந்து 17 பேர் விடுதலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு