20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சட்டவிரோத நாணயத்தாள்களுடன் இருவர் கைது

 706 அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் 2 சந்தேக நபர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-தாராபுரம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் முதலில் கைது செய்யப்பட்ட நபர் 19 வயதுடைய தலைமன்னார் பகுதியில் வசித்து வருபவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் உந்துருளி ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த போது காவல்துறையினர் திடீரென இவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத்தாள்கள் இவரிடம் இருந்துள்ளன.

இது தொடர்பில் இவர் முன்னுக்கு பின் முரணாக இவர் பதிலளித்ததை தொடர்ந்து இவைகள் சட்டவிரோத நாணயத்தாள்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்ட விடயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றுமொரு நபரையும் இதன்போது காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேக நபருக்கு உதவியமை, அவரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேற்படி 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





சட்டவிரோத நாணயத்தாள்களுடன் இருவர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு