22,May 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது

கிளிநொச்சி - பளை - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடுப்பகுதியில் வீடொன்றில் இருந்து 32 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபரை இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு