கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதற்காக புதிய வீதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரபரப்பான சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால் அதற்கு மாற்று நடவடிக்கைக்காக இந்த வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட வீதியில் இருந்து இரண்டு வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
0 Comments
No Comments Here ..