20,Apr 2024 (Sat)
  
CH
தொழில்நுட்பம்

வியக்க வைக்கும் பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம்!

பண்டைய தமிழ் இலக்கியங்கள் தமிழரின் பல்வேறு பண்பாட்டு அழகியல் வாழ்வினை விளக்கி நிற்கின்றனர். பூமியில் நிலைகொண்டு வாழும் மனிதகுலத்தின் வாழ்வியல் தேவைகள் பல அவற்றில் அடிப்படையானத் தேவைகள் உணவு, உடை, உறையுள் என்பதாகும். இவற்றுள் உடையெனப்படும் ஆடை மனித உடலின்மேல் அணிந்து உடலை மூடிக்கொள்வதற்குப் பயன்படும் ஒன்றாகும்.ஆடையானது தொடக்கக்காலத்தில் காலநிலைக் கூறுகளான குளிர், வெயில், மழை போன்றவற்றிலிருந்து உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பின் மானத்துடன் தொடர்புடையதாகவும் வளமையின் அடையாளமாகவும், வாழ்வில்மையம் கொண்டது.

இன்று ஆடையானது அழகியலோடும், தன்னம்பிக்கையோடு தொடர்புதாக ஏற்றும் கண்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பவளர்ச்சிக் கண்ட இன்றைய நாளில் ஆடைகள் பலவிதவண்ணங்களும் வேலைப்பாடுகளும் கொண்டு பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. இவற்றிற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் தமிழ்ச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு வண்ண ஆடைகள் இருந்துவந்தன. ஆடைகளின் தன்மைக்கு ஏற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை என்ற பெயரால் ஆடைகள் புழகத்தில் இருந்தன. மேலும் ஆடையைக லிங்கம், காழகம், அறுவை, மடி, கூறை என்ற பெயர்களாலும் சுட்டினார். பட்டு, பருத்தி, எலிமயிர், நார் முதலியவற்றால் ஆடைகள் நெய்து அணியும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர்.

‘பட்டினும், மயிரினும்பருத்திநூலினும் ’(சிலம்பு 5:16-17)

‘நூலினும்உலண்டினும்நாரினும்இயன்ற’ (பெருங்கதை 1.420:21)

என்றஅடிகள்இதனைஉறுதிசெய்கின்றன.நுட்பமான வேலைப்பாட்டுடனும், வேறுபட்டத் தட்பவெட்பநிலைக்கு தகுந்தவாரும், சூழலுக்கு தகுந்தவாரும், பொருளியல் நிலைக்கு தகுந்தவாரும் ஆடைகளை அணிந்துள்ளனர். அவைகள் பட்டாடை பூவாடை, பொன்னாடை, வட்டுடை, கச்சை தாளிதம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டன. பருத்தியினால் நூல் நூற்றனர்.

“பருத்திப்பெண்டின்பனுவல்அன்ன’ (புறம் 125 -1)

என்ற அடிகள் விளக்குகின்றன. பட்டு, கம்பளி, பருத்தி நூல் இவற்றினால் மிகத் துல்லியமானத் தொழில்நுட்பத்துடன் ஆடை நெய்தனர்.

‘பட்டினும்மயிரினும்பருத்திநூலினும்

கட்டும்நுண்வினைக்காருகர்’ (சிலம்பு 5. 16,17)

நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். ஆடைதொழிலுக்குப் பயன்பட்ட பருத்தியை இவர்கள் பயிரிட்டே பயன்படுத்தினர்.

‘பருத்திவேலிச்சீறூர்மன்னன்’ (அகம் 299 -17)

என்றஅடிகள்உறுதிசெய்கின்றன.

‘இணைபடநிவந்தநீலமென்சேக்கை’ (கலி 7 :1 )

அன்னத்தூவி போன்ற மென்பொருள்கள் திணித்து நீலப்பட்டினால் அமைந்த படுக்கை என்ற பொருளமைய இடம் பெறும் இவ்வடிகள் மிக மெல்லியதாக நெய்யும் தொழில் நுட்பம் அன்று இருந்ததை விளக்குவதாக அமைக்கின்றது.

அறிவியல் வளர்ச்சி கண்ட இன்றைய நாளில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் நுட்பம் அறிந்து அதனை செயல்படுத்துகின்றனர். அன்றே நூல்நூற்றதுடன் நூலுக்கு சாயம் ஏற்றும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர் தமிழர்கள் ;.

‘சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்

நிறங்கவர்புபுனைந்தநீலக்கச்சினர்’ (மதுரைகாஞ்சி 638, 639)

கருமணலின் நிற மொத்த நீலநிறம் தோயக்கப்பட்ட கச்சு என்ற பொருள் தரும் இவ்வடிகள் மிக நுட்பமாக சாய மேற்றிய தொழில்நுட்பத்தினைக் காட்டுகின்றன. பல்வேறு வண்ணங்களை மரப்பட்டைகளின் துணையோடு, சில வேதிகளை சேர்த்து வண்ணங்களை கண்டுபிடித்து அதனை ஆடைகளுக்கு ஏற்றியக் குறிப்புகளும் காணப்படுகின்றன.அரிக்காமேட்டு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சாயக்தொட்டிகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பெற்ற நூல் நூற்கும் தக்களியும், சாய மேற்றும் தொழில்நுட்பம் தமிழர்களிடம் இருந்ததை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.இன்றைய நாகரீக உலகில் நீச்சல் உடைஅணிந்து நீச்சல் அடிக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அந்த ஆடைகள் அதற்கு தகுந்த வடிவமைப்புடன் கிடைக்கின்றது. தமிழன் இடத்துக்கு தகுந்தர்போல் ஆடை அணியும் அறிவும், அதனை வடிவமைக்கும் திறனையும் பழங்காலத்திலேயே பெற்றிருந்தான்.

‘எறிவனஎக்குவஈரணிக்கேற்ற

நறவணிபூந்துகில்’ (பரிபாடல் 22 : 18, 19)

புனல்விளையாட்டிற்கெனஈரணியும், பூந்துகிலும்அணிந்தனர்துணிகளைவெளுத்துகஞ்சிஏற்றிப்பயன்படுத்தினர்.

‘ துறைபோகுஅறுவைத்தூமடிஅன்ன

நிறங்கிளர்தூவிச்சிறுவெள்ளாங்குருகு’ (நற்றிணை 70: 2,3)

துணிகளை குருகின் நிறம்போலவெண்மையாகவெளுத்துஉடுத்தினர் புலைத்திகஞ்சியில்துணியைத்தோய்த்துஎடுத்துக்கல்லில்அடித்துத்துவைத்த, முறுக்கியநீர்பிரியாதஆடைபகன்றைபூவைஒத்திருந்ததுபொருள்பட.

‘நலத்தகைபுலைத்திபசைதோய்த்துஎடுத்துத்

தலைப்புடைப்போக்கித்தண்கயத்துஇட்ட

நீரின்பிரியாப்பரூஉத்திரிகடுக்கும்

பேர்இலைப்பகன்றைபொதிஅவிழ்வான்பூ’ (குறுந்தொகை 330:1,4)

‘வறன்இல்புலைத்திஎல்லித்தோய்த்த

புகாப்புகர்கொண்டபுன்பூங்கலிங்கம் ’ (நற்றிணை 90: 1,4)

வெளுத்து கஞ்சியிட்ட மிடுக்கான ஆடையை அணிந்து மகிழ்ந்தனர் நுட்பமும் மெல்லிய தன்மையும், பூ வேலைப்பாட்டுடனும் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன.

பல்வேறு அழகிய உடைகள் தமிழகத்தில் இருந்தன. உடையின் விளிம்பிலோ, முன்தானையிலோ, உடலிலோ ஆடைகள் மிக அழகாக விளங்கிட தாமரை, அல்லி, மல்லிகை, பிட்சிப்பூ, மாம் பிஞ்சு போன்ற உருவங்கள் அழகு பெற்று விளங்குமாறு உருவங்கள் ஏற்றப்பட்டு ஆடைகள் நெய்யப் பெற்றன.

பாம்பின் சட்டைபோலவும் மூங்கில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால்காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும், பால்நுரை போலவும் அருவிநீர் வீழ்ச்சி தோற்றம் போலவும் மெல்லிய நுண்ணிய ஆடைகளை அணிந்தனர். அதற்கு பல்வேறு வண்ணம் ஏற்றினர் பல்வேறு வடிவம் தந்தனர். காலநிலைக்கு தகுந்தாற்போலவும் இடத்திற்கு தகுந்தாற்போலவும் உடையை தேர்வு செய்தனர். ஆடைகளை வெளுத்து உடுத்தினர். பருத்தியை பயிர்இட்டு பயன்படுத்தினர். பூவேலைப்பாட்டுடன் ஆடைகள் வடிவமைத்தனர்.

இன்றைய நவீன நாகரிக வளர்ச்சியின் கூறுகளாக ஆடை தொழில்நுட்பத்தில் பின்பற்றப்படும். பல அர்ல்ய தொழில்நுட்பங்களை ஆடை தயாரிப்பில் அன்றே பயன்படுத்தி ஆடையை உற்பத்தி செய்வதிலும் உடுத்துவதிலும் உச்சம்பெற்றே திகழ்ந்தனர்





வியக்க வைக்கும் பழந்தமிழரின் ஆடைத் தொழில்நுட்பம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு