கொலம்பியா, அதன் இயற்கை அழகுக்கும், அமேசான் காடுகளின் ஒரு பகுதிக்கும் பெயர் பெற்றது. அழகான கடற்கரைகள், மலைப் பிரதேசங்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த நாடு, தற்போது ஒரு சோகமான நிகழ்வைச் சந்தித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அன்டியோகியா மலைப் பிரதேசத்தில், குறிப்பாக பெல்லோ சிகரத்தில், இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, கரையோர வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந்தக் கனமழையின் விளைவாக, பெல்லோவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில், மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தகவலறிந்த பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்து மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த இயற்கை சீற்றம் கொலம்பியாவின் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, அல்லது மீட்புப் பணிகள் விரைந்து முடிந்து நிலைமை சீராகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 Comments
No Comments Here ..