15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு

மன்னாரில் இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ வெடி மருந்து மற்றும் அதற்கு பயண்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (02) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வெடி மருந்து மற்றும் குச்சுகள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பள்ளிமுனை கோந்தை பிட்டி கடற்கரையோர பகுதியில் இன்று (03) காலை சக்தி வாய்ந்த வெடி பொருள் ஒன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து குறித்த வெடி பொருளை மீட்டுள்ளனர்.

மேலதிக நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு