14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட ஐ.தே.க. பரிந்துரை

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து சஜித் பிரேமதாச தரப்பினரால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கூட்டணியாக உருவாக்கப்படாமல் கட்சியாக உருவாக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்டு இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன், ஏனைய கட்சி உறுப்பினர்களை யானை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த தீர்மானத்தின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, அதன் யானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட ஐ.தே.க. பரிந்துரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு