30,Apr 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைப்பு

உள்ளக முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ள சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று (10) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இன்று காலை 10.30 க்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை கட்சி, லிபரல் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு முன்னணி ஆகிய 6 கட்சிகளே இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

மேற்குறித்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதுடன் கட்சியின் உரிமை தொடர்பிலும் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பை எந்த தினத்தில் நடத்தலாம் என்பது குறித்த இறுதி தீர்மானமும் இன்று எட்டப்படவுள்ளதாக குறித்த பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (11) இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இதுவரை 24 சுயேற்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு