கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடை செய்துள்ளன.
அதற்கமைய இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து கட்டார் இராஜியத்திற்குள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென்கொரியா, மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
கட்டார் இராஜியத்தின் இந்த தீர்மானத்திற்கு ஒரு விமான நிறுவனமாக இணங்க வேண்டியுள்ளதாகவும் அதனால் தமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக கவலை வெளியிடுவதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..