19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அனுமதிப்பத்திரம் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். இருப்பினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முடியும் என்று அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்கு கொடுப்பனவு அல்லது தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கு வீதி பரிசோதனையின் போது நிவாரணம் வழங்குமாறு காவல்துறை தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.




அனுமதிப்பத்திரம் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு