18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வடக்கில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய 21 மாவடங்களிலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று நண்பகல் வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளாக 622 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 311 பேர் இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து இன்றுவரை ஒருவாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 311 பேரில் 235 பேர் கடற்படையினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





வடக்கில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படவில்லை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு