07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மீண்டும் அதிகரித்துள்ள தேங்காய் விலை...!

சந்தையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்பொழுது தேங்காய் ஒன்று சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

அங்காடிகளில் தேங்காய் விலை அதிகரித்தமையை அடுத்து தேங்காய் ஒன்றின் சுற்றளவிற்கு அமைய விலையை நிர்ணயித்து அரசாங்கம் விசேட வர்த்தமானியையும் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்டிருந்தது.

இதற்கமைய 13 அங்குள சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 70 ரூபாவாகவும், 12 முதல் 13 அங்குள சுற்றளவுடைய தேங்காய் ஒன்றின் அதி கூடிய சில்லறை விலை 65 ரூபாவாகவும், 12 அங்குலத்திற்கு குறைவான சுற்றளவினை கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 60 ரூபாவாகவும் நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

எனினும் தற்பொழுதும் தேங்காய் விலை அதிகமாகவே காணப்படுகின்றது என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.




மீண்டும் அதிகரித்துள்ள தேங்காய் விலை...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு