18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! கேள்விக்குறியாகியுள்ள பெண்ணின் திருமணம்

வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம்எவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வீட்டிலுள்ளவர்கள் கிராம அலுவலகத்திற்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளரின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருணமத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட தாயின் தாலிக்கொடி, மோதிரம் மற்றும் காப்பு என்பவும்.

அத்துடன் சிமாட் போன், சிறியதொகைப் பணம் போன்றவற்றை வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கொள்ளயிட்டு சென்றுள்ளனர்.

கிராம அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் பின் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து திருடன் ஒருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்தவர்கள் அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர் .

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்ற பொலிஸார் திருடன் தப்பிச் சென்ற வழிகளை இனங்காட்டிய மோப்ப நாய் வீட்டிற்குப் பின்புறமாக உள்ள குளத்திற்கு அருகில் படுத்துக்கொண்டது எனினும் திருடனின் செருப்பு அங்கு காணப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் இவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

.சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! கேள்விக்குறியாகியுள்ள பெண்ணின் திருமணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு