24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ, கடுவெல நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு

கொரோனா வைரசு தொற்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்கள் இன்று (14) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் பாராமரிப்பு மற்றும் நடவடிக்கை பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவிக்கையில் , கடுவெல பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 2 நுழைவாயில்களும் வெளியேறும் 02 நுழைவாயில்களும் , கொட்டாவ பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 02 நுழைவாயில்களும், வெளியேறும் 2 நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளிலுள்ள நுழைவாயில்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ, கடுவெல நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு