19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவில் பொலிசார் உட்பட 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில் 7 பொலிசார் உட்பட 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (26.05) இரவு வெளியாகின.

அதில், வவுனியா நிலைய பொலிசார் 7 பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் 7 வயது சிறுமி உட்பட இருவருக்கும், குட்செட் வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், வவுனியா நகரில் ஒருவருக்கும், ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றும் ஒருவருக்கும் என 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 








வவுனியாவில் பொலிசார் உட்பட 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு