இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் அஹமத் அலி அல் சயீக் இற்கும் இடையே இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பில், இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும், இலங்கைத் தொழிலாளர்களை பாதுகாத்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமைக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் அல் சயீக் இற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..