12,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு புதிய இணைப்பாளர்!

ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்திற்குட்ட மீள்குடியேற்ற திட்டம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு புதிய இணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் என்பவரே உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் கீத்நாத் காசிலிங்கம், பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு புதிய இணைப்பாளர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு