கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் திடீர் தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை
0 Comments
No Comments Here ..