23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பெற்றோர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், பிள்ளைகள் நோய் நிலைமைக்கு ஆளாகக் கூடிய ஆபத்து காணப்படுவதால், பெற்றோர் மிகவும் அவதானமாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ளுமாறு விசேட வைத்தியர் ஜீ. விஜேசூரிய கோரியுள்ளார்.

சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உடனே கொரோனா அறிகுறிகள் வெளிக்காட்டாமல் இரு வாரங்கள் கடந்த பின்னர் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, கண்கள் சிவத்தல், வாந்தி போன்ற நிலைமைகள் ஏற்படும். இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானித்தால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிகுறி ஏற்பட்டால் உள் உறுப்புகள் வீக்கமடைய வாய்ப்புள்ளதாகவும், இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு உள்ளான ஐந்து சிறுவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நோய் அறிகுறிகளால், சிறுவர்கள் உயிரிழக்கக்கூடிய நிலைமை உருவாக வாய்ப்புகள் இருப்பதால் பெற்றோர் மற்றும் வளர்ந்தோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு