13 வயது சிறுமிக்கு வரம் தருவதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிக்கு உட்பட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜகிரிய பிரதேச விகாரை ஒன்றின் பிக்கு உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் அத்தனகல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
2.jpg)












0 Comments
No Comments Here ..