20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

கோவிட் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் பொது சுழற்சியை 80% முதல் 90% வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கோவிட் 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சுகாதாரப் பணியாளர்களிடையே நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சுகாதாரப் பணியாளர்களுக்கு, தடுப்பூசியின் மூன்றாவது அளவு அல்லது பூஸ்டர் வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது





அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு