20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பவித்ரா கூறிய ராஜா கதை!

முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் பேசிய விடயம் தற்போது கொழும்பு அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பவித்ரா வன்னியாராச்சிக்கு பிரியாவிடை வழங்குவதற்காகவும், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை வரவேற்கவும் ஒரு சிறப்பு கூட்டம் சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்றது.

“எதிர்பாராத தருணத்தில் போக்குவரத்து அமைச்சகம், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தாம், ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் வரை தமக்கு இது தெரிந்திருக்கவில்லை” பவித்ரா வன்னியாராச்சி கூறியிருந்தார்.

அவர் தனது பிரியாவிடை உரையின் போது ஒரு புகழ்பெற்ற ராஜா கதையைப் பற்றி பேசியிருந்தார், இது ஒரு மறைக்கப்பட்ட செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறதா என்று சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறிய கதை....

“ஒரு ஊரில் அரசரும் அவரின் தலைமை ஆலோசகரும் (புரோகித) பயணமொன்று சென்றுகொண்டிருந்தார்களாம். போகும் வழியில் கண்ட மான் ஒன்றினை நோக்கி தனது வில்லை எடுத்து அம்பை எய்தினாராம் அரசர்..

ஏன் புரோகிதரே ஒருநாளும் இல்லாமல் குறி பிழைத்து விட்டது ? கேட்டாராம் அரசர். எல்லாம் நன்மைக்கே என்றாராம் அந்த புரோகிதர். இன்னுமொரு நாள் அரசரின் வாளால் அவரது விரலே வெட்டுப்பட்டுவிட்டது .ஏன் இப்படி நடந்தது என்று புரோகிதரிடம் கேட்டாராம் அரசர்.







பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பவித்ரா கூறிய ராஜா கதை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு