24,Jan 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தினம் மற்றும் நேரம் என்பன ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.





இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு