இலங்கை இளைஞன் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளதாக கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயற்சித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தெரனியகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு இந்த அழைப்பு கிடைத்துள்ளது. அழைப்பேற்படுத்தியவர், வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த இளைஞன் வெற்றி பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பணப்பரிசினை வழங்குவதற்கு தகவல் அவசியம் என்பதனால், பெயர், விலாசம், கையடக்க தொலைபேசி இலக்கம், வங்கி கணக்கிலக்கம், மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு மோசடியாளர் கோரியுள்ளார்.
தகவல்களை பெற்றவுடனேயே மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளது. அதில் லண்டன் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக அதில் உள்ள ஆவணங்களை திறந்து பார்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..