25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள உறுதிமொழி

செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை மொழிப் பயன்பாட்டாளர்களின் மொழியியல் அடையாளமான, சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சைகை மொழித் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக தாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை இந்த சிறப்பான நாளில் நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச சைகை மொழித் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“மனிதர்களின் சகல செயற்பாடுகளுக்கும் கேட்டல் திறனும், மொழிப் புரிதலும் அவசியமாகும். எனவே எமது சமூகத்தில் உள்ள பிறப்பிலேயே கேட்கும் திறனை இழந்த செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரை போன்றே உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


மேற்படி தேவைக்காக உருவான சைகை மொழியானது தற்போது இயற்கை சைகை மொழியாக முன்னேற்றமடைந்துள்ளது.

இந்நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட 'இலங்கை சைகை மொழி' காலத்தின் மாற்றங்களுடன் வளர்ச்சியடைந்து பொதுவாக செவிப்புலனற்ற நபர்களுக்கு நன்மையாக அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கையாகும்.


சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதுடன், முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.







பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள உறுதிமொழி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு