05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

எந்தச் சந்தேகம் கொள்ள வேண்டாம் - சிறிலங்காவின் நீதியமைச்சர் கொடுத்துள்ள வாக்குறுதி

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற நிலையியல் கட்டளையில் 27/2 இன் கீழ் விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

இதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளித்துள்ளதாவது,

“அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம், அதேபோல் இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுப்போம். நீதி அமைச்சராக இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இனிமேல் எப்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் அரசியல், இன மற்றும் மத சாயம் பூசி இதனை கையாளாது இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அவ்வாறான எந்த பாகுபாடும் பார்க்கப்படாது.





எந்தச் சந்தேகம் கொள்ள வேண்டாம் - சிறிலங்காவின் நீதியமைச்சர் கொடுத்துள்ள வாக்குறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு