ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) நாடு திரும்பியுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் விசேட விமான மூலம் நாட்டை வந்தடைந்தள்ளார்.
அவருடன் பயணமாகியிருந்த ஏனைய குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டத்தினை தளர்த்துவதற்கான உத்தரவை அமெரிக்காவில் இருந்து கொண்டே பணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..