கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), விமல் வீரவன்ச(Wimal Weerawansa) மற்றும் உதய கம்மன்பில(Udaya Gammanpila) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனியான சட்டத்தரணிகள் குழு முன்னிலையில் வாதிட தீர்மானித்துள்ளனர்.
பங்குகளை மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்களை வரும் 26ம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
0 Comments
No Comments Here ..