29,Mar 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

தமிழ் மக்களின் மனங்களை வெல்ல என்ன வழி?

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை செய்ய அனுமதிக்க வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன் (Kukanesan) தெரிவித்துள்ளார்.

நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற அரசின் செயலணி நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடாத்திய சந்திப்பில், பிரதேசத்திற்குரிய அரசியல்வாதிகளோ மதகுருக்களோ அழைக்கப்படாது தன்னிச்சியான ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாக அமைந்திருக்கும் என்பது நீங்கள் அறிந்திருக்கும் விடயம்.

ஒரு நாட்டினுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சட்டத்தினை மதிக்காதவரிடம் கையளிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம். எதிர்காலத்தில் இந்தச் செயலணி எவ்வாறு இயங்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியான விடயம்.

மூவின மக்களும் வாழ்கின்ற இந்த தேசத்தில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் ஒதுக்கிவிடப்பட்ட நிலையிலும், இன்று மூவினத்தையும் உள்ளடக்கினாலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற அடிப்படையில் நாங்கள் எங்கள் பிரதேசங்களில் தமிழ்மக்களுக்காக சேவைகளை வழங்குகின்றபோது அது குற்றச்செயலாக கருதப்படுகின்றது.







தமிழ் மக்களின் மனங்களை வெல்ல என்ன வழி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு