03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

தமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேந்ர்த பாரதி, சசிகுமார், மணி மற்றும் அசோக்குமார் ஆகிய நான்கு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பினருகே நேற்று (சனிக்கிழமை) இரவு தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறியதாக கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று மாலை யாழ். பண்ணையிலுள்ள நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த மீனவர்களிடம் அங்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கி தமது படகையும் கடலுக்குள் மூழ்கடித்தே தம்மைக் கைது செய்துள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.





தமிழக மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது- நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு