22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு!! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் கடந்த ஆறு வருடங்களில் மாத்திரம் லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஆகியவற்றின் எரிவாயு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இன்று இந்த விடயத்தை தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துரித நடவடிக்கை எடுத்து மக்களை அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு வலியுறுத்தினர்.

தற்போது எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், இது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 12 எரிவாயு சிலிண்டர்களின் மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சேகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரிகள் பரிசோதனைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கைகள் மொரட்டுவ பல்கலைக்கழக நிபுணர்களிடம் ஆலோசனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.





நாட்டில் 233 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு!! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு