இந்து சமுத்திர வலயமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் நிலையமாகக் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வர்த்தகமானது பிராந்திய நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது.
புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.












0 Comments
No Comments Here ..