19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

திருகோணமலையில் ரயில் மோதி ஒருவர் மரணம்

திருகோணமலை பிறீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா -கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  





திருகோணமலையில் ரயில் மோதி ஒருவர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு