நள்ளிரவிலிருந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
157 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 177 ரூபாவாகும். அத்துடன் எக்ஸ்ட்ரா பிரிமியம் 95 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 121 ரூபாவாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 159 ரூபாவாகும்.
0 Comments
No Comments Here ..