கிளிநொச்சி ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் தங்களிடம் எவ்வித அனுமதியோ அல்லது அறிவித்தலோ வழங்காது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது எனவும்’ கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களம் மற்றும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் என்பன தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை குறித்த பாடசாலையில் பிரபல தனியார் கண்மருத்துவ நிலையத்தினரால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பார்வை குறைபாடு உள்ளதாக 71 மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.
0 Comments
No Comments Here ..