இலங்கை மக்களிடையே போசாக்கின்மை பிரச்சினைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் கொள்வனவு இயலுமை நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதனால் போசாக்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என்று வயம்பல பல்கலைக்கழகத்தின் போசாக்கு தொடர்பான பேராசிரியர் ரேணுக சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலைமைகளினால் அநேகர், தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். பொருட்களின் விலை அதிகரிப்பினால் சிலர் ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..