28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

சவூதி அரேபிய பிரஜை ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

வீசா இன்றிய நிலையில் இலங்கையில் தங்கியிருந்த சவூதி அரேபிய பிரஜை ஒருவரை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வீசா இன்றிய நிலையில் இலங்கையில் தங்கியிருந்த சவூதி அரேபிய பிரஜை ஒருவர், குடிவரவு குடியகல்வு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சவூதி அரேபிய பிரஜையை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.




சவூதி அரேபிய பிரஜை ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு