ஒமைக்ரோன் மாறுபாடு காரணமாக இலங்கையில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
வார இறுதி நீண்ட விடுமுறையின் போது, பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் அதிகளவில் இடம்பெற்றதால், அடுத்த இரு வாரங்களில் நாளாந்தம் இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, அந்தச் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..